அவதூறு வழக்கு விஜயகாந்த் ஆஜராக நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு

   முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராகுமாறு நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி நாமக்கல் குளக்கரை திடலில் தேமுதிகவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு பேசிய அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அரசு வழக்கறிஞர் தனசேகரன், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணைக்காக டிசம்பர் 3ஆம் தேதி நேரில் விஜயகாந்த் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
-சத்திஷ் K .K.K.nagar