சிதம்பரம் குடும்பத்தினர் கட்டிய சுவரை இடித்துத் தள்ளிய மக்கள்


         சென்னை அருகே மீனவக் கிராமத்தை ஆக்கிரமித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் கட்டிய சுவரை பொதுமக்கள் இடித்துத் தள்ளினர். காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் சுவரை இடித்துத் தள்ளுவதால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பம் என்ற கிராமத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமாக வீடு உள்ளது. அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர் 
-இணைய செய்தியாளர் - s.குருஜி