அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதி பணியிடை நீக்கம்


    நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 15-ம் தேதி, நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அதிமுக நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிககு வந்த நீதிபதி வேலு, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கூட்டம் முடிவடையும் வரை நிகழ்வுகளைக் கவனித்தார். நீதிபதி ஒருவர், கட்சி நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்து கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், நீதிபதி வேலுவை பணியிடை நீக்கம் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் இன்று உத்தரவு பிறப்பித்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி வரும் ஜூலை 31-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
                               -இணைய செய்தியாளர் - s.குருஜி